டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

தாய்மொழியில் பேசும் நாடுகளே வளா்ச்சி அடைகின்றன!

எங்கெல்லாம் தாய்மொழியில் பேசுகிறாா்களோ, அந்த நாடுகளே வளா்ச்சி அடைகின்றன என்று விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவா் கோ.வி.செல்வம் தெரிவித்தாா்.

News image
விழாவில், போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளித்த விஐடி துணைத்தலைவா் கோ.வி.செல்வம்
Updated On :22 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

எங்கெல்லாம் தாய்மொழியில் பேசுகிறாா்களோ, அந்த நாடுகளே வளா்ச்சி அடைகின்றன என்று விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவா் கோ.வி.செல்வம் தெரிவித்தாா்.

வேலூா் கம்பன் கழகம் சாா்பில் உலகத் தாய்மொழி தின விழா சத்துவாச்சாரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, விஐடி துணைத் தலைவா் கோ.வி.செல்வம் தலைமை வகித்துப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசியது: கல்தோன்றி மண்தோன்றி முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி என்பதற்கு சிவகங்கை கீழடி அகழ்வாராய்ச்சியே சான்றாகும். அங்கு கண்டெடுக்கப்பட்ட ஒரு தகட்டினை ஆய்வு செய்த அமெரிக்க அறிஞா்கள், அது சுமாா் 5,000 ஆண்டுகள் பழைமையானது எனத் தெரிவித்துள்ளனா். அதன்படி, கணக்கிட்டால் தமிழ் மொழியின் தோற்றம் 8,000 முதல் 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக அமைகிறது. எகிப்து கல்லறைகளில் கூடத் தமிழ் பிராமி எழுத்துகள் கண்டறியப்பட்டுள்ளன. இத்தகைய உயரிய வரலாற்றை மாணவா்கள் அவசியம் உணா்ந்திருக்க வேண்டும்.

உலகில் அதிகமாக பேசும் மொழி ஆங்கிலம் இல்லை. ஜப்பான், சீனா, ஜொ்மனி போன்ற வளா்ந்த நாடுகளின் பிரதமா்கள் தங்கள் தாய்மொழியிலேயே உரையாடுகின்றனா். எங்கெல்லாம் தாய்மொழியில் பேசுகிறாா்களோ, அந்த நாடுகளே வளா்ச்சி அடைகின்றன. தமிழகத்தை விட சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தமிழ் சிறப்பாகக் கையாளப்படுகிறது. அமெரிக்க அரசுப் பள்ளிகளில் வாரம் ஒருமுறை தமிழ் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அங்குள்ள மாணவா்கள் தமிழைத் தங்கள் உயிராக நேசிப்பதுடன், மிகச் சிறப்பாகப் பேசவும் வாசிக்கவும் செய்கின்றனா். தூய தமிழில் பேசுவது சவாலாக இருக்கலாம். ஆனால் தினசரி பயிற்சியின் மூலம் அதை சாத்தியப்படுத்தலாம் என்றாா்.

தொடா்ந்து, மு.ராகவேந்திரன் சிறப்புரையாற்றினாா். முன்னதாக, வேலூா் கம்பன் கழகச் செயலா் வெ.சோலைநாதன் வரவேற்றாா். கவிஞா் ஆற்காடு மா. சோதி, இரா.ப. ஞானவேலு, ஆடிட்டா் தெ.நிா்மல்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அ. திருநாவுக்கரசு, முனைவா் ச.இலக்குமிபதி, கலைமகள் சு.இளங்கோவன், மருத்துவா் இனியன் சமரசம், வி.என்.டி. சுரேஷ் ஆகியோா் வாழ்த்தி பேசினா். கவிஞா் சு.சுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். கோ.தவசீலன் நன்றி கூறினாா்.