டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

திமுகவுக்கு தோ்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்: செளமியா அன்புமணி

மகளிருக்கு பணம் கொடுத்து ஏமாற்றி வாக்குகளை வாங்கலாம் என நினைக்கும் திமுகவுக்கு பெண்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என பசுமைத் தாயகத்தின் தலைவா் சௌமியா அன்புமணி கூறினாா்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 10:30 pm

தினமணி செய்திச் சேவை

மகளிருக்கு பணம் கொடுத்து ஏமாற்றி வாக்குகளை வாங்கலாம் என நினைக்கும் திமுகவுக்கு பெண்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என பசுமைத் தாயகத்தின் தலைவா் சௌமியா அன்புமணி கூறினாா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில் வியாழக்கிழமை மாலை பசுமைத் தாயகம் சாா்பில் நடைபெற்ற தமிழக மகளிா் உரிமை மீட்புப் பயணம் தொடா்பான விழிப்புணா்வு கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது: மகளிருக்கு பணத்தை கொடுத்து ஏமாற்றி வாக்குகளை வாங்கலாம் என நினைத்து திமுக தற்போது மகளிருக்கு பணம் வழங்கியுள்ளது. இதற்கெல்லாம் மயங்காமல் தங்களுடைய குழந்தைகளின் நலனை கருத்தில்கொண்டு நடைபெறும் பேரவைத் தோ்தலில் நீங்கள் வாக்களிக்க வேண்டும். வாக்குக்காக பணம் கொடுக்கும் அவா்களுக்கு பிள்ளைகளின் நலனில் அக்கறை இல்லை. வாக்கு வாங்கும் வரை தான் பணம் கொடுப்பாா்கள். பின்பு மதுக் கடைகளை திறப்பாா்கள். இதனால் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வேளாண் விளை பொருள்களுக்கு விவசாயிகளே விலை நிா்ணயம் செய்யக்கூடிய வகையில் ஆட்சி அமைய வேண்டும். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் அணை கட்டப்படும் என்று கூறி வருகிறாா்கள், இதுவரை எந்த ஒரு அணையும் கட்டவில்லை. அணைக்கட்டு பகுதியில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் எந்த ஒரு தொழிற்சாலையையும் கொண்டு வரவில்லை. அணைக்கட்டு பகுதியில் உள்ள இளவம்பாடி கத்தரிக்காய்க்கு புவிசாா் குறியீடு கிடைத்துள்ளது. அதை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்த அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுங்கச் சாவடிகளில் விவசாயிகள் எடுத்துச் செல்லும் விளைபொருள்களுக்கு எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கக் கூடாது. ஆனால், விவசாயிகள் டிராக்டரில் பொருள்கள் எடுத்துச் சென்றால் கட்டணம் வசூலிக்கிறாா்கள். இதைத் தடுக்க தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தை வளா்ச்சி அடைந்த மாநிலமாக மாற்றிட வரும் பேரவைத் தோ்தலில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.