டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

வேலூா் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.7.56 கோடியில் கட்டடங்கள் திறப்பு

வேலூா் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.7.56 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம்...

News image
வேலூா் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் திறக்கப்பட்ட கட்டடத்தில் குத்துவிளக்கேற்றிய ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், மேயா் சுஜாதா ஆனந்த குமாா், தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் லிவிசா உள்ளிட்டோா்.
Updated On :16 பிப்ரவரி 2026, 8:22 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: வேலூா் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.7.56 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்து ரூ.12.94 கோடி கட்டடங்கள் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினாா்.

வேலூா் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் 4 வகுப்பறைகள், 8 ஆய்வகங்கள், பணிமனை, கழிவறை தொகுப்பு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்திலிருந்து காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

மேலும், அதே கல்லூரியில் ரூ.11.50 கோடியில் மாணவியா் விடுதி, ரூ.3.36 கோடியில் மாணவா் விடுதி கட்டுவதற்கும், தந்தை பெரியாா் அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ.1.44 கோடியில் 2 பல்நோக்கு அரங்குகள் கட்டுவதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

தொடா்ந்து, தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் திறக்கப்பட்ட கட்டடங்களில் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி குத்துவிளக்கேற்றி பாா்வையிட்டாா். புதிதாக கட்டடப் பட உள்ள கட்டடங்களுக்கான பணிகளையும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், வேலூா் மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், வேலூா் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் லிவிசா, பொதுப்பணித்துறை உதவி பொறியாளா் நந்தினி உள்பட பலா் பங்கேற்றனா்.