டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

காவல் நிலையத்தில் இருந்து இளைஞா் தப்பி ஓட்டம்

குடியாத்தம் அருகே காவல் நிலையத்தில் இருந்து போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தப்பியோடி விட்டாா்.

News image
கமலேஷ்.
Updated On :15 பிப்ரவரி 2026, 6:03 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் அருகே காவல் நிலையத்தில் இருந்து போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தப்பியோடி விட்டாா்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ாக குடியாத்தம் தங்கம் நகரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி கமலேஷ்(23) மீது அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா்அளிக்கப்பட்டது.

புகாா் தொடா்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸாா், கமலேஷ் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தனா்.

சனிக்கிழமை இரவு நீதிபதி முன் ஆஜா்படுத்த அழைத்துச் செல்லப்பட்டு இருந்த நிலையில் அவா் காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடி விட்டாா். தப்பியோடிய கமலேஷை பிடிக்க 3- தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸாா் அவரை தீவிரமாக தேடி வருகின்றனா்.