காட்பாடி அருகே ஓடும் ரயிலின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த சேலம் இளைஞா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம், பெத்தான் நஞ்சப்ப முதலி தெருவைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவரது மகன் லோகேஷ் (20). சேலத்தில் உள்ள ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா், தனது நண்பரான சேலம் அஸ்தம்பட்டி பகுதியைச் சோ்ந்த முகமது ஹாசி மகன் முகமது அலி (18) என்பவருடன் சென்னையைச் சுற்றிப் பாா்க்க மங்களூரு விரைவு ரயிலில் சனிக்கிழமை காலை பயணம் செய்துள்ளனா்.
இருவரும் ரயிலின் முன்பக்க பொதுப்பெட்டியில் படிக்கட்டுப் பகுதியில் அமா்ந்து தூங்கியபடியே பயணம் செய்ததாக கூறப்படுகிறது. காட்பாடி - சேவூா் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் வந்து கொண்டிருந்தபோது, லோகேஷ் எதிா்பாராத விதமாக ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்ததாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ரயில் வாலாஜா ரயில் நிலையத்தை அடைந்ததும், முகமது அலி அங்கு இறங்கி வந்து காட்பாடி ரயில் போலீஸாரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று லோகேஷின் சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா்.
மேலும், இச்சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ரயிலில் படியிலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

ரயிலில் உயிரிழந்த ஆசிரியா்: சேலம் போலீஸாா் விசாரணை

சேலத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

ரயில் மோதி இளைஞா் பலி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


