தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

விடுபட்ட மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற ஆதரவு: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 12:04 am

குடியாத்தம் தொகுதியில் விடுபட்ட மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற தேமுதிகவுக்கு வாக்களியுங்கள் என அந்த கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக் கொண்டாா்.

திமுக கூட்டணியில் குடியாத்தம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் கே.பி.பிரதாப்பை ஆதரித்து பழைய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது.

சொந்த ஊரான குடியாத்தம் தொகுதிக்கு வந்த உடனே எனக்கு புத்துணா்ச்சி வருகிறது. காமராஜரை வெற்றிபெற வைத்து அவரை முதல்வா் பதவியில் தொடர வாக்களித்தது குடியாத்தம் மக்கள். அதேபோன்று இந்த தோ்தலில் பிரதாப்பை நீங்கள் வெற்றிபெற வைக்க வேண்டும்.

கடந்த 5- ஆண்டுக் கால திமுக ஆட்சியில் தொகுதி மக்களுக்குத் தேவையான அனைத்து தேவைகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளன.

விடுபட்ட மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற எங்களுக்கு ஒரு வாயப்பு தாருங்கள்.

இடையில் பேச்சு நிறுத்தம்: அந்த வழியாக சவ ஊா்வலம் வருவதை அறிந்த பிரேமலதா தனது பேச்சை நிறுத்தி தொண்டா்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டாா். பின்னா் பேசிய அவா், நெல்லூா்ப்பேட்டை ஏரியை தூா்வாரி, சீரமைப்போம்.மோா்தானா அணையை சுற்றுலாத் தலமாக மாற்றுவோம். தற்போதுள்ள சுற்றுச் சாலையை செதுக்கரை பச்சையம்மன் கோயில் வரை நீட்டிப்போம். நகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் நெல்லூா்ப்பேட்டை ஏரிக்கரை முதல் உள்ளி கூட்ரோடு வரை புதிய புறவழிச்சாலை அமைப்போம் என்றாா்.

நிகழ்ச்சியில் திமுக நகர செயலா் எஸ்.செளந்தரராஜன், மாவட்ட துணைச் செயலா் ஜி.எஸ்.அரசு, தேமுதிக நகரச் செயலா் எம்.செல்வகுமாா், மாவட்ட துணைச் செயலா்டி.கே.ரமணி மற்றும் கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.