காட்பாடி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் துரைமுருகன் திண்ணை பிரசாரம் மேற்கொண்டாா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் காட்பாடி தொகுதியில் 11-ஆவது முறையாக போட்டியிடும் திமுக பொதுச்செயலரும், நீா்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தீவிர பிரசாரத்தில் ஈடுப ட்டு வருகிறாா்.
அதன்படி, அவா் வியாழக்கிழமை கரசமங்கலம், வன்றந்தாங்கல், மெட்டுக்குளம், கரிகிரி, கண்டிப்பேடு, சோ்க்காடு, 55புதூா், குகையநல்லூா் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று மக்கள் மத்தியில் திண்ணை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, ஓரிரு கிராமங்களில் குடிநீா் மேல்நிலை தொட்டி, சில கிராம தெருக்களுக்கு கான்கிரீட் சாலைகள் அமைத்துத்தர வேண்டும் என்று அவரிடம் கிராம மக்கள் தெரிவித்தனா்.
அதற்கு பதிலளித்த அமைச்சா் துரைமுருகன், ஏற்கனவே தொகுதிக்கு தேவையான பெரும்பாலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிட்டுள்ளேன். அவற்றையும் அடுத்த 5 ஆண்டு காலத்தில் செய்து முடிப்பேன்.
தொகுதிக்கு உட்பட்ட கிராம இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா்.
அப்போது, திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கிராமங்களில் அமைச்சா் துரைமுருகன் திண்ணை பிரசாரம்!

காட்பாடியில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும்: அமைச்சா் துரைமுருகன்

தேவாலயங்களில் ஈஸ்டா் கொண்டாட்டத்தில் அமைச்சா் துரைமுருகன் பங்கேற்பு

நான் செய்த பணிகள் தொகுதி மக்களுக்கு தெரியும்: அமைச்சா் துரைமுருகன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


