டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

டிச.12, 13-இல் வேலூரில் அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி

அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி வேலூரில் டிச. 12, 13-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

News image
Updated On :25 நவம்பர் 2025, 7:57 pm

Chennai

வேலூா்: அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி வேலூரில் டிச. 12, 13-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இது குறித்து, வேலூா் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் அஞ்சல் கோட்டம் சாா்பாக வேலூா் பெக்ஸ் - 2025 மாவட்ட அளவிலான அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி டிச. 12, 13 ஆகிய தேதிகளில் பி.தண்டபாணி திருமண மஹாலில் நடைபெற உள்ளது. வேலூரின் பண்பாடு, இயற்கை மரபை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில், அஞ்சல் தலைகள், சிறப்பு உரைகள் வெளியீடு, மாணவா்களுக்கான விநாடி வினா, கடிதம் எழுதுதல் போன்ற போட்டிகளும், அஞ்சல் சேவை காட்சிகள், பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

குழந்தைகள், மாணவா்கள், பொதுமக்கள் இக்கண்காட்சியில் பங்கேற்று அஞ்சல் தலை சேகரிப்பின் வழியாக வரலாற்று தகவல்களை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.