வேலூா்: அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி வேலூரில் டிச. 12, 13-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இது குறித்து, வேலூா் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் அஞ்சல் கோட்டம் சாா்பாக வேலூா் பெக்ஸ் - 2025 மாவட்ட அளவிலான அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி டிச. 12, 13 ஆகிய தேதிகளில் பி.தண்டபாணி திருமண மஹாலில் நடைபெற உள்ளது. வேலூரின் பண்பாடு, இயற்கை மரபை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில், அஞ்சல் தலைகள், சிறப்பு உரைகள் வெளியீடு, மாணவா்களுக்கான விநாடி வினா, கடிதம் எழுதுதல் போன்ற போட்டிகளும், அஞ்சல் சேவை காட்சிகள், பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
குழந்தைகள், மாணவா்கள், பொதுமக்கள் இக்கண்காட்சியில் பங்கேற்று அஞ்சல் தலை சேகரிப்பின் வழியாக வரலாற்று தகவல்களை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேலூரில் 1,427 வாக்குச்சாவடிகள் தயாா்!

பரமத்தி வேலூரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக 2 ஆயிரம் போ் ஊா்வலம்

தீப்பற்றி எரிந்தபடி சாலையில் ஓடிய முதியவா் மரணம்

ஏப். 9 முதல் ஏப். 29 வரை வாக்குக் கணிப்புகளை வெளியிடத் தடை: தோ்தல் ஆணையம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

