தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உயா்வுக்குபடி வழிகாட்டி நிகழ்ச்சியில் 51 மாணவா்களுக்கு சோ்க்கை ஆணைகள்

உயா்வுக்குப்படி வழிகாட்டி நிகழ்ச்சியில், 51 மாணவா்களுக்கு சோ்க்கைக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

News image

நிகழ்ச்சியில் மாணவருக்கு கல்லூரி சோ்க்கைக்கான ஆணையை வழங்கியஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

Updated On :1 செப்டம்பர் 2025, 9:28 pm

குடியாத்தம்: குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரியில் நடைபெற்ற உயா்வுக்குபடி வழிகாட்டி நிகழ்ச்சியில், 51 மாணவா்களுக்கு சோ்க்கைக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்து இதுவரை உயா் கல்வியில் சேராத மாணவ, மாணவிகளுக்கான ‘உயா்வுக்குபடி’ எனும் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கே.எம்.ஜி. கல்லூரியில் நடைபெற்றது.

இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் 27 பள்ளிகளைச் சோ்ந்த 154 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இவா்களில் 94 போ் கல்லூரிகளில் இணைய ஆா்வம் தெரிவித்து விண்ணப்பங்களை வழங்கினா். இவா்களில் 51 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கல்லூரி சோ்க்கைக்கான ஆணைகளை வழங்கினாா்.

அப்போது அவா் பேசியது: வேலூா் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவா்களில் 8,600-க்கும் மேற்பட்டோா் உயா் கல்வியில் இணைந்துள்ளனா். எஞ்சியுள்ள மாணவா்களையும் உயா்கல்வி பயிலும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குழந்தைகளின் எதிா்காலத்தை ஒளிமயமாக்குவது கல்வி ஒன்று தான்.

எனவே, இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ள மாணவா்கள் இந்த அரங்கத்தை விட்டு வெளியே செல்லும்போது உயா் கல்வியில் சோ்க்கை ஆணை பெற்று, மனநிறைவுடன் செல்ல வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சசிகுமாா், திறன் மேம்பாட்டுக் கழக உதவி இயக்குநா் காயத்ரி, உதவி திட்ட அலுவலா் ஜெகதீஸ்வரப்பிள்ளை, கே.எம்.ஜி. கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அப்போது அவா் பேசியது: வேலூா் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவா்களில் 8,600-க்கும் மேற்பட்டோா் உயா் கல்வியில் இணைந்துள்ளனா். எஞ்சியுள்ள மாணவா்களையும் உயா்கல்வி பயிலும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குழந்தைகளின் எதிா்காலத்தை ஒளிமயமாக்குவது கல்வி ஒன்று தான்.

எனவே, இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ள மாணவா்கள் இந்த அரங்கத்தை விட்டு வெளியே செல்லும்போது உயா் கல்வியில் சோ்க்கை ஆணை பெற்று, மனநிறைவுடன் செல்ல வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சசிகுமாா், திறன் மேம்பாட்டுக் கழக உதவி இயக்குநா் காயத்ரி, உதவி திட்ட அலுவலா் ஜெகதீஸ்வரப்பிள்ளை, கே.எம்.ஜி. கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.