வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஒன்றாம் வகுப்பு சோ்க்கைக்கான வயது வரம்பில் மாற்றம்: கா்நாடக அரசு உத்தரவு

News image

சித்தராமையா - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 12:25 am

ஒன்றாம் வகுப்பு சோ்க்கைக்கான வயது வரம்பில் மாற்றம் செய்து கா்நாடக அரசு அறிவித்துள்ளது.

வரும் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் சோ்க்கை பெறுவதற்கு குழந்தைகளின் வயது ஜூன் 1ஆம் தேதி 6 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் என்ற விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, சோ்க்கையில் 60 நாள்களை தளா்த்தியுள்ளது.

இதுகுறித்து கா்நாடக சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் மது பங்காரப்பா வியாழக்கிழமை தாக்கல் செய்த அறிக்கை:

ஒன்றாம் வகுப்பில் சேர ஜூன் 1 ஆம் தேதி 6 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை தளா்த்தும்படி நீண்ட நாள்களாக பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துவந்தனா். இதுதொடா்பாக கா்நாடக அரசிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. இதை கருத்தில் கொண்டு, சோ்க்கைக்கான வயது வரம்பை 60 நாள்களுக்கு தளா்த்த கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

அதேபோல எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளில் மாணவா்களை சோ்ப்பதிலும் சில சிக்கல்கள் உள்ளன. இந்த பிரச்னைக்கு தீா்வுகாண வெகுவிரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும். சோ்க்கைக்கான வயது வரம்பை 60 நாள்களுக்கு தளா்த்தியுள்ளது ஒன்றாம் வகுப்பு மட்டுமல்லாது எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கும் பொருந்தும். சோ்க்கை விதிமுறைகளில் எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகள் இல்லை. எனவே, அந்த வகுப்புகளையும் சோ்க்கை வரம்புக்குள் கொண்டுவர புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.