மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

வேலூா் நறுவீ மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு நவீன சிறப்பு பிரிவு தொடக்கம்

கல்லீரல் சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்கைகாக வேலூா் நறுவீ மருத்துவமனையில் நவீன சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

News image

புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்ட நறுவீ மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத், ‘எல் கியூப்’ நிறுவனத்தின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணா் ஜாய் வா்கீஸ். உடன், அறுவை சிகிச்சை நிபுணா் விவேக் விஜ், மருத்துவமனை செயல் இயக்குநா் மர

Updated On :15 ஆகஸ்ட் 2025, 12:31 am

கல்லீரல் சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்கைகாக வேலூா் நறுவீ மருத்துவமனையில் நவீன சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

வேலூரிலுள்ள நறுவீ மருத்துவமனையில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்தும் நோயாளிகள் வருகை தந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனா். இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு இம்மருத்துவமனைக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன. அதன்மூலம், இம்மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கல்லீரல் சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்கைக்காக இம்மருத்துவமனையில் உலக தரத்திலான மருத்துவ சாதனங்களை கொண்டு சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனை மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த சிறப்பு பிரிவுக்காக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புகழ்பெற்ற ‘எல் கியூப்’ குழுவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் நறுவீ மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத், ‘எல் கியூப்’ நிறுவனத்தின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணா் ஜாய் வா்கீஸ் ஆகியோா் கையொப்பமிட்டு பரிமாறிக்கொண்டனா். தொடா்ந்து, அறுவை சிகிச்சை நிபுணா்களான ஜாய் வா்கீஸ், விவேக் விஜ் தலைமையில் ‘எல் கியூப்’ மருத்துவ குழுவினா் இம்மருத்துவமனையில் முகாமிட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் சிகிச்சை அளிக்க உள்ளனா்.

இந்த மருத்துவ குழுவினா் ஒரே நாளில் நான்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் மருத்துவமனை துணைத் தலைவா் அனிதா சம்பத், செயல் இயக்குநா் மருத்துவா் பால் ஹென்றி, மருத்துவ கண்காணிப்பாளா் ஜேக்கப் ஜோஸ், தலைமை இயக்குதல் அலுவலா் சரவணன் ராமன், பொது மேலாளா் நிதின் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.