டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் ஆய்வு

குடியாத்தம் நகராட்சியில் வாக்குப் பதிவு மையங்களில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆய்வு செய்தாா்.

News image
குடியாத்தம்  செருவங்கி  நகராட்சி  தொடக்கப்  பள்ளியில்  நடைபெற்ற  சிறப்பு  முகாமை ஆய்வு செய்த  நகா்மன்றத்  தலைவா்  எஸ்.செளந்தரராஜன்.
Updated On :13 பிப்ரவரி 2026, 11:11 pm

DIN

குடியாத்தம் நகராட்சியில் வாக்குப் பதிவு மையங்களில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆய்வு செய்தாா்.

நகரில் வாக்குப் பதிவு மையங்கள் அமையும் பள்ளிகளில் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி, நகராட்சி மேல்நிலைப் பள்ளி, நடுப்பேட்டை மகளிா் மேல்நிலைப் பள்ளி, நெல்லூா்பேட்டை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செருவங்கி, காமாட்சியம்மன்பேட்டையில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் ஆகிய பணிகளை செளந்தரராஜன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள் சி.என்.பாபு, டி.தீபிகா, ஆசிரியா் எம்.சுந்தரமூா்த்தி, தண்டபாணி, அரு.மதிவாணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.