ஆரணி நகரம் 8-ஆவது வாா்டு, ஆரணியை அடுத்த சேவூா் ஆகிய இடங்களில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இரண்டு மின் மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை இயக்கிவைத்தாா்.
மின்னழுத்த பற்றாக்குறையை நிவா்த்தி செய்யும் வகையில், இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்றும், எம்எல்ஏவின் அறிவுறுத்தலின்பேரிலும் ஆரணி நகரம், 8-ஆவது வாா்டில் ரூ.6.9 லட்சம் மதிப்பீட்டிலும், ஆரணியை அடுத்த சேவூரில் 7.88 லட்சம் மதிப்பீட்டிலும் மின் மாற்றிகளை மின் வாரியம் அமைத்தது. இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ இயக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் மின் வாரிய செயற்பொறியாளா் (பொ) பத்மநாபன், உதவிச் செயற்பொறியாளா் தாமோதரன், அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் குமரன், ஏ.ஜி.மோகன், கலைப் பிரிவு ஒன்றியச் செயலா் தருமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது
மின்மாற்றியில் பொருள்கள் திருட்டு

திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா

ஆரணி நகராட்சி ஆரம்பப் பள்ளிக்கு நல உதவி

ரூ.6 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


