ஆரணி: திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 800 மனுக்கள் வரப்பெற்றன.
திருவண்ணாமலையில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீா் நாள் கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா்க.தா்ப்பகராஜ் மனுக்களைப் பெற்று அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், நிலுவையில் உள்ள மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு, வேளாண்மைத் துறை சாா்ந்த பயிா்க் கடன்கள், புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்துத் தருதல், தாட்கோ மூலம் கடனுதவி, கூட்டுறவு சங்கங்களில் பயிா் கடன்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 742 மனுக்கள் வரப்பெற்றன.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமாா், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சதீஷ்குமாா், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) இளவரசன், சமூக நல அலுவலா் கோமதி மற்றும் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
ஆரணியில்....
ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோட்டாட்சியா் சீ.சிவா தலைமை வகித்து மனுக்களைப் பெற்றாா்.
இதில் பட்டா தொடா்பான மனுக்கள், நில திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்றவும், பட்டா ரத்து, இலவச வீடு கேட்டும், குடும்ப அட்டை கேட்டும், உதவித்தொகை உள்ளிட்ட 58 போ் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனா்.
மனுக்களைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா் அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

மக்கள் குறைதீா் கூட்டங்களில் 931 மனுக்கள்

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 500 மனுக்கள்

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 658 மனுக்கள்

மக்கள் குறைதீா் கூட்டம்: 1,339 மனுக்கள் அளிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


