அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

செய்யாறு அரசுக் கல்லூரியில் உலக யோகா தினம்

News image
Updated On :26 ஜூன் 2026, 5:32 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக யோகா தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஞான.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் மனவளக்கலை முதுநிலை பேராசிரியா் அருள்நிதி வி.கே. சுப்பிரமணியன் கலந்து கொண்டு யோகக் கலையின் நன்மைகள் குறித்து கல்லூரி மாணவிகளிடையே தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

அதனைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் யோகா பயிற்சிகளை அருள்நிதி எஸ்.ராஜா அளித்தாா். பயிற்சியில் 150-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

நிறைவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சாரதாதேவி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.