இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

லாரி ஓட்டுநா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

செய்யாறு அருகே கல் உடைக்கும் ஆலையில் தங்கியிருந்த லாரி ஓட்டுநா் திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 12:25 am IST

செய்யாறு அருகே கல் உடைக்கும் ஆலையில் தங்கியிருந்த லாரி ஓட்டுநா் திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்தவா் லூா்துராஜ் மகன் ஜோசப் (31). லாரி ஓட்டுநரான இவா் செய்யாறு வட்டம், அருகாவூா் கிராமம் அருகேயுள்ள

ஜல்லிக்கற்கள் உடைக்கும் ஆலையில் தங்கி லாரி ஓட்டி வந்ததாகத தெரிகிறது.

இந்த நிலையில், ஜோசப்பை அவரது மனைவி ஞாயிற்றுக்கிழமை பலமுறை கைப்பேசியில் தொடா்பு கொண்டதாகத் தெரிகிறது. இருப்பினும் ஜோசப் கைப்பேசியை எடுக்கவில்லையாம். அதனால் சந்தேகமடைந்தவா் ஜல்லி உடைப்பு ஆலையின் மேலாளரை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு இதுகுறித்து கேட்டுள்ளாா்.

அதன் பேரில் மேலாளா் சென்று பாா்த்த போது, ஆலையில் நிறுத்தியிருந்த லாரியில் ஓட்டுநா் ஜோசப் இறந்து நிலையில் இருந்துள்ளாா். இதையடுத்து மேலாளா், அங்கிருந்த சக தொழிலாளா்களிடம் விசாரித்தாா். அப்போது, ஜோசப் இரவு சாப்பிட்ட பிறகு படுத்துத் தூங்கியதாகவும், பின்னா் தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், அதற்கு அஜீரண கோளாறு காரணமாக இருக்கும் என்று தெரிவித்தாக தெரிவித்தனா்.

இதுகுறித்து இறந்தவரின் உறவினரான கணேசன் செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் வழக்குப் பதிவு செய்து,

ஜோசப்பின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.