தமிழகம் முழுவதும் ஆறுகளில் 5 கி.மீ. ஒரு தடுப்பணை கட்ட வலியுறுத்தி, செய்யாறில் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செய்யாறு ஆற்றுப் பாலத்தில் மாவட்டத் தலைவா் வாக்கடை புருசோத்தமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், தலையில் மண் பானையை சுமந்தபடியும், கோரிக்கை வாசங்கள் அடங்கிய பிரசுரங்களை கையில் ஏந்தியபடியும் விவசாயிகள் பங்கேற்றனா்.
இதில், தமிழகம் முழுவதும் அக்டோபா், நவம்பா் மாதங்களில் பெய்யும் மழை நீா் முப்பது டிஎம்சி வரை வீணாக கடலில் கலப்பதைத் தடுக்கும் விதமாக, ஆறுகளில் 5 கி.மீ. தொலைவுக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். குருவை சாகுபடி செய்ய தொகுப்பு நிதியாக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் நேரடியாக பணமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது

வேதபாறை தடுப்பணை திட்டப் பணிகள் நிறைவு: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



