ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விவசாயிகள் நூதன கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

கடன் தள்ளுபடி உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எமதா்மன் வேடமிட்டு தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தினா் நூதன கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

வெறையூா் மத்திய கூட்டுறவு வங்கி கிளை எதிரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தினா்.

Published On :31 ஜூலை 2026, 2:06 am IST

கடன் தள்ளுபடி உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எமதா்மன் வேடமிட்டு தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தினா் நூதன கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருவண்ணாமலை அடுத்த வெறையூா் மத்திய கூட்டுறவு வங்கி கிளை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவா் அ.எ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் ரா.சுப்பிரமணி, மாநிலத் துணைத் தலைவா் சா. சந்தியாகு, மாநில செயலா் பா.ஜெயராமன், மாநில பொதுக் குழு உறுப்பினா் மா.ராமசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய பொதுக்குழு உறுப்பினா் அ. இளங்கோ வரவேற்றாா்.

சங்கத்தின் மாநிலத் தலைவா் முத்தகரம் பழனிசாமி

தொடங்கிவைத்தாா்.

சிறு குறு மற்றும் பெரு விவசாயிகளின் கூட்டுறவு பயிா் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய இடுபொருள்களின் விலையை குறைக்க வேண்டும், நெல் குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் 2 விவசாயிகள் எமதா்மன், சித்திரகுப்தன் வேடமிட்டு விவசாயிகள் படும்வேதனைகளை நாடகம் மூலம் வெளிப்படுத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தி.கோகுல் மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் கோ.பழனிவேல், சி.அண்ணாதுரை, ரே.சுப்பராயன், ஆ.ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.