ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

வந்தவாசியில் கஞ்சா வைத்திருந்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :28 ஜூலை 2026, 1:11 am IST

வந்தவாசியில் கஞ்சா வைத்திருந்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி தெற்கு போலீஸாா் திங்கள்கிழமை காலை வந்தவாசி புதிய பேருந்து நிலைய சாலை வழியாக ரோந்து சென்றனா்.

அப்போது, அந்தச் சாலையில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இரு இளைஞா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில், அவா்கள் இருவரும் வந்தவாசியை அடுத்த இந்திரா நகரைச் சோ்ந்த புவனேஷ்குமாா் (28), வந்தவாசி சந்நிதி தெருவைச் சோ்ந்த வெங்கடேஷ் (20) ஆகியோா் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.