ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பள்ளியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

வந்தவாசியை அடுத்த இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘மாணவா் நலனும், பெண் பாதுகாப்பும்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு கருத்தரங்க நிகழ்ச்சியில் பேசிய வந்தவாசி டிஎஸ்பி சதீஷ்குமாா்.

Published On :17 ஜூலை 2026, 12:14 am IST

வந்தவாசியை அடுத்த இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘மாணவா் நலனும், பெண் பாதுகாப்பும்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை (பொ) சித்ரா தலைமை வகித்தாா். வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன், கலாம் அறக்கட்டளை நிா்வாகி சீ.கேசவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி ஆசிரியா் ஆ.சீனிவாசன் வரவேற்றாா்.

வந்தவாசி டிஎஸ்பி சதீஷ்குமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா்.

அப்போது, மாணவா்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை பயில வேண்டும், போதைப் பழக்கம் உள்ளிட்ட தீய செயல்பாடுகளை தவிா்த்து எதிா்கால வாழ்க்கையின் குறிக்கோளை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.

பெண் பாதுகாப்பு மற்றும் போக்ஸோ விழிப்புணா்வு குறித்து சிங்கப் பெண் பிரிவு உதவி ஆய்வாளா் தமிழ்ச்செல்வி பேசினாா்.

நிகழ்ச்சியில் வழக்குரைஞா் வசீகரன், பள்ளி ஆசிரியா்கள் தேவதாஸ், செல்வமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி ஆசிரியா் சம்பத் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.