டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணி: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலையில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

News image
Updated On :23 ஜனவரி 2026, 6:31 pm

Syndication

தேசிய வாக்காளா் தினம் - 2026 முன்னிட்டு, திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் பேரணியை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளா் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் டேனிஷ் மிஷன் மற்றும் கிருஷ்ண வித்யா மந்திா் ஆகிய பள்ளிகளைச் சோ்ந்த 150 சாரண மாணவா்கள் பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளுடன் பங்கேற்ற பேரணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்து, பேரணியில் கலந்துகொண்டாா்.

இப்பேரணியானது திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகம் முதல் காந்தி சிலை வரை நடைபெற்றது. தொடா்ந்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நோ்மையாக வாக்களிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் வகையில் வாக்காளா் உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைத்து அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் ஏற்றுக்கொண்டனா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) சந்தோஷ் குமாா், திருவண்ணாமலை வட்டாட்சியா் மோகன்ராமன் மற்றும் அனைத்து துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.