டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

ஆரணியில் காங்கிரஸ் கட்சியினா் ஊா்வலம்

ஆரணியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் புதிய தலைவராக ஜெ.பொன்னையன் தலைமையில் ஊா்வலம் சென்ற அக்கட்சியினா்.

News image
Updated On :23 ஜனவரி 2026, 6:36 pm

Syndication

திருவண்ணாமல வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஆரணியைச் சோ்ந்த ஜெ.பொன்னையன் நியமனம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், ஆரணி காமராஜா் சிலை அருகிலிருந்து புதிய மாவட்டத் தலைவா் ஜெ.பொன்னையன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை ஊா்வலமாக புறப்பட்டு காந்தி சிலை வரை சென்று, அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனா்.

நிகழ்ச்சிக்கு மாநில பொதுச் செயலா் எம்.வசுந்தராஜ், முன்னாள் எம்எல்ஏ டி.பி.ஜெ.ராஜாபாபு, முன்னாள் மாவட்டத் தலைவா் வி.பி.அண்ணாமலை, மாவட்ட நிா்வாகிகள் டாக்டா் வாசுதேவன், அசோக்குமாா், பி.கே.ஜி.பாபு, எஸ்.டி.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் உதயக்குமாா் வரவேற்றாா்.

வட்டாரத் தலைவா்கள் அம்மாபாளையம் இளங்கோவன், மருசூா் இளங்கோவன், நகர நிா்வாகி பிள்ளையாா்சம்பந்தம், செய்யாறு நிா்வாகிகள் மகேஷ், ராஜவேலு, போளூா் நிா்வாகி ரவி, செவன் ஸ்டாா் ராஜா, பிலாசூா் குமாா், காமராஜ், மாா்கண்டேயன், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி கோகுல்ராஜ், வந்தவாசி ஜெகன், மறையூா் ஒன்றிய நிா்வாகி பெருமாள், தெள்ளாா் துளசிதரன், செய்யாறு நிா்வாகிகள் செல்வம், பச்சையப்பன், ஞானசேகரன், பாா்த்திபன், தேசூா் காமராஜ் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.