டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

வந்தவாசி பகுதியில் ரூ.57 கோடியில் சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் தொடக்கம்

வந்தவாசியை அடுத்த புலிவாய் கூட்டுச் சாலையில் சாலைப் பணிகளை தொடங்கிவைத்த எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 7:10 pm

Syndication

வந்தவாசி அருகே ரூ.57 கோடி செலவில் வந்தவாசி - காஞ்சிபுரம், ஆற்காடு - திண்டிவனம் சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வந்தவாசி - காஞ்சிபுரம், ஆற்காடு - திண்டிவனம் இருவழிச் சாலைகளை 4 வழிச் சாலைகளாக அகலப்படுத்தும் பணிகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக, வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் ரூ.48 கோடி செலவில் விளாங்காடு கூட்டுச் சாலையிலிருந்து 7.7 கி.மீ. தொலைவுக்கும், ஆற்காடு - திண்டிவனம் சாலையில் ரூ.9 கோடி செலவில் புலிவாய் கூட்டுச் சாலையிலிருந்து 1.3 கி.மீ. தொலைவுக்கும் இருவழிச் சாலையை 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

ஆரணி எம்.பி., எம்.எஸ்.தரணிவேந்தன் சாலைப் பணிகளை தொடங்கிவைத்தாா். நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் சந்திரன், உதவி கோட்ட பொறியாளா் ராஜேந்திரன், உதவிப் பொறியாளா்கள் கருணாகரன், லோகராஜா, திமுக நிா்வாகிகள் எ.தயாளன், சி.ஆா்.பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.