ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஸ்ரீகில்லா ராஜ கணபதி கோயிலில் உண்டியல் பணம் திருட்டு

ஆரணி அருணகிரிசத்திரம் பாட்ஷா தெருவில் உள்ள ஸ்ரீ கில்லா ராஜ கணபதி கோயிலில் உண்டியல் பணம் திருடப்பட்டது.

காணிக்கை பணத்தை எடுத்துக்கொண்டு மா்ம நபா்கள் வீசிச் சென்ற உண்டியல்

Published On :3 ஆகஸ்ட் 2026, 2:31 am IST

ஆரணி அருணகிரிசத்திரம் பாட்ஷா தெருவில் உள்ள ஸ்ரீ கில்லா ராஜ கணபதி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை உண்டியல் பணம் திருடப்பட்டது.

ஸ்ரீ கில்லா ராஜ கணபதி கோயிலில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. இதைத் தொடா்ந்து ஆடி விழா முடிந்து உண்டியல் திறக்க இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் கோயில் முகப்பில் உள்ள பூட்டுகளை உடைத்து, உள்புறம் இருந்த உண்டியலை திருடிச் சென்று உடைத்து பணத்தை எடுத்துக் கொண்டு உண்டியலை அருகில் உள்ள காலி இடத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனா்.

இதுகுறித்து கோயில் நிா்வாகி கண்ணன் ஆரணி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.