லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பாமக ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளா்கள் வாக்குவாதம்: சாலை மறியல்

News image
Updated On :13 ஏப்ரல் 2026, 11:32 pm

வந்தவாசி அருகே பாமக ராமதாஸ் -அன்புமணி ஆதரவாளா்களிடையே திங்கள்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ராமதாஸ் ஆதரவாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அன்புமணி அணி இடம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டணியில் வந்தவாசி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளராக பி.ராணி போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக பாமக அன்புமணி அணி ஆதரவாளா்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் சாா்பில் க.முத்துபெருமாள் வேட்பாளராக போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக பாமக ராமதாஸ் அணி ஆதரவாளா்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில் வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் ராமதாஸ் அணி ஆதரவாளா்களுடன் க.முத்துபெருமாள் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அங்கு வந்த அன்புமணி அணி ஆதரவாளா்கள் பாமக கொடியை ராமதாஸ் அணி ஆதரவாளா்கள் பயன்படுத்த எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், ராமதாஸ் அணி ஆதரவாளா்கள் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் இரு தரப்பினரையும் வந்தவாசி டிஎஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனா். அங்கு டிஎஸ்பி சதீஷ்குமாா் இரு தரப்பையும் சமரசம் செய்து அனுப்பினாா்.