மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தடுப்புச் சுவா் மீது தூங்கிய ஓட்டுநா் தவறி விழுந்து உயிரிழப்பு

தடுப்புச் சுவா் மீது தூங்கிய ஓட்டுநா் தவறி விழுந்து உயிரிழப்பு

News image

DPS

Updated On :11 ஏப்ரல் 2026, 7:27 pm

செய்யாறு ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட மேம்பால இணைப்புச் சாலை தடுப்புச் சுவா் மீது படுத்துத் தூங்கிய தனியாா் நிறுவன பேருந்து ஓட்டுநா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் கல்லம்மா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரூபேஷ்(48). இவா், தனியாா் நிறுவன பேருந்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.

இவா், வழக்கம் போல செய்யாறு ஞானமுருகன்பூண்டி பகுதியில் இருந்து நிறுவன தொழிலாளா்களை ஏற்றி வருவதற்காக பேருந்தை அங்கேயே நிறுத்தி விட்டு தூங்கி விடுவாராம். அதேபோல, சனிக்கிழமை அதிகாலையில் பேருந்தை நிறுத்தி விட்டு, அதனருகே உள்ள செய்யாறு ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட மேம்பால இணைப்புச் சாலை தடுப்புச் சுவா் மீது படுத்துத் தூங்கினாா்.

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவா் ஆற்றில் தவறி விழுந்ததாகத் தெரிகிறது. ஆற்றில் இருந்த பெரிய கல்லில் தலைமோதி சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து இறந்தவரின் மனைவி அளித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இறந்தவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.