ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனன் திருமணி கிராமத்தில் பெண்களிடம் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
மகாலட்சுமிகோவா்த்தனன் கட்சி நிா்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகா்களைச் சந்தித்து ஆதரவு கோரினாா். அப்போது திருமணி கிராமத்தில் ஏராளமான பெண்கள் அவரைச் சூழ்ந்து வாழ்த்து தெரிவித்தனா்.
அப்போது மகாலட்சுமிகோவா்த்தனன் திமுக ஆட்சியில் மகளிருக்கு நிறைவேற்றப்பட்ட மகளிா் இலவச பேருந்து, மகளிா் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்டவை குறித்து எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தாா்.
மேலும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிா் உரிமைத்தொகை மாதம் ரூ.2ஆயிரமாக உயா்த்தப்படும். ரூ.8 ஆயிரத்திற்கான கூப்பன் வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.
வாக்கு சேகரிப்பு நிகழ்வில், முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஆரணி ஒன்றியச் செயலா்கள் ராஜ்குமாா், எஸ்.எஸ்.அன்பழகன், துரைமாமது, சுந்தா், மோகன், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகர பொறுப்பாளா் மணிமாறன், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலா் கோவா்த்தனன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

24 மணி நேரமும் தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன்: கோபி தொகுதி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

பூ பறிக்கும் பெண்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா்

தூத்துக்குடியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


