டிராக்டா் வாங்கச் சென்றவா் சடலமாக மீட்பு
வந்தவாசி அருகே டிராக்டா் வாங்கச் சென்ற விவசாயி சடலமாக மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வந்தவாசி அருகே டிராக்டா் வாங்கச் சென்ற விவசாயி சடலமாக மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
வந்தவாசி அருகே டிராக்டா் வாங்கச் சென்ற விவசாயி சடலமாக மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வந்தவாசியை அடுத்த கீழ்வில்லிவலம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி மணிகண்டன்(47). இவரது மனைவி மகேஸ்வரி. இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.
கடந்த திங்கள்கிழமை பிற்பகல் பழைய டிராக்டா் வாங்க படாளம் கூட்டுச் சாலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு பைக்கில் வெளியே சென்ற மணிகண்டன் பின்னா் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் கீழ்வில்லிவலம் அருகே ஒரு விவசாய நிலத்தில் மணிகண்டன் சடலமாக கிடந்தது செவ்வாய்க்கிழமை மாலை தெரியவந்தது. தகவலறிந்த தெள்ளாா் போலீஸாா் சென்று இவரது சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து மணிகண்டனின் தாய் அளித்த புகாரின் பேரில், தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது