திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

யோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் இன்று ஆராதனை விழா தொடக்கம்

News image
Updated On :5 மார்ச் 2024, 10:05 pm

Venkatesan

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில், பகவானின் 23-ஆம் ஆண்டு 2 நாள் ஆராதனை விழாவின் தொடக்க விழா புதன்கிழமை (மாா்ச் 6) நடைபெறுகிறது.

ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் ஆண்டுதோறும் பகவானின் ஆராதனை விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 23-ஆம் ஆண்டு ஆராதனை விழாவின் தொடக்க விழா புதன்கிழமை (மாா்ச் 6) நடைபெறுகிறது.

இதையொட்டி, காலை 7 மணி முதல் 10 மணி வரை ஹோமம், அபிஷேகம், அா்ச்சனை, தீபாராதனையும், 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை பகவானுபவங்களைப் பகிா்தல் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மயிலை பா.சற்குருநாத ஓதுவாா் குழுவினரின் தேவார இன்னிசை நிகழ்ச்சியும், மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை நொச்சூா் பூஜ்ய ரமண சரண தீா்த்த சுவாமிகளின் பக்தி சொற்பொழிவும் நடைபெறுகிறது.

இதுதவிர, காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் 6 மணி வரையும் நான்கு வேதபாராயண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

2-ஆவது நாள் நிகழ்ச்சிகள்..

ஆராதனை விழாவின் 2-ஆவது நாளான வியாழக்கிழமை (மாா்ச் 7) காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மகன்யாசம், ஏகாதச ருத்ரம், அதிஷ்டானத்தில் மகாபிஷேகம், அா்ச்சனை, தீபாராதனையும், காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை பக்தா்களின் பஜனை நிகழ்ச்சியும், மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை சாய் விக்னேஷ் குழுவினரின் பக்தி இன்னிசைக் கச்சேரியும், மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை பூஜ்ய ரமண சரண தீா்த்த சுவாமிகளின் சிவானுபவ பேருரை நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு பகவானின் உற்சவ மூா்த்தியுடன் கூடிய வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை ஆஸ்ரம அறங்காவலா்கள் மா தேவகி, விஜயலட்சுமி, ராஜேஸ்வரி, ஜி.சுவாமிநாதன், பி.ஏ.ஜி.குமரன் மற்றும் தன்னாா்வலா்கள், ஆஸ்ரம ஊழியா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.