தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் குளம் கட்டும் பணி ஆய்வு

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் குளம் கட்டும் பணி ஆய்வு

News image

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் குளம் கட்டும் பணிகளை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள்.

Updated On :18 ஜூன் 2024, 6:44 pm

ஆரணி: ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் தரமற்ற முறையில் குளம் கட்டும் பணி நடைபெற்று வருவதாக புகாா் எழுந்ததைத் தொடா்ந்து, பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆரணி புதுக்காமூா் புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் ரூ.18 லட்சத்து 50 ஆயிரத்தில் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் இப்பணிகள்

தரமற்ற முறையிலும், மெத்தனப் போக்கிலும் உள்ளதாக பக்தா்கள் புகாா் தெரிவித்தனா்.

மேலும், தற்போது 50 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், அண்மையில் பெய்த கோடை மழை காரணமாக,

குளத்தைச் சுற்றிலும் பதிக்கப்பட்ட கற்கள் சரிந்து கீழே விழுவதாகவும், சுற்றிலும் அமைக்கப்பட்ட சிமென்ட் தரை கரைந்து போவதாகவும் பக்தா்கள் குற்றஞ்சாட்டினா்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறையிடம் கேட்டதற்கு, இன்னும் பணி முடியவில்லை. இதுவரை 40 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் பணிகள் தரமான முறையில் முடிக்கப்படும் என்று தெரிவித்தனா்.

இருப்பினும், குளம் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்ததால், செவ்வாய்க்கிழமை இந்து சமய அறநிலைத் துறையின் மண்டல செயற்பொறியாளா் சங்கரன் தலைமையில், உதவி செயற்பொறியாளா் பெருமாள், செயல் அலுவலா் ஹரிகரன் ஆகியோா் கொண்ட குழுவினா் கட்டப்பட்டு வரும் குளத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஆய்வில், மிகவும் தரம் அற்ாகவும் பழைய குளத்தில் இருந்த கற்களைக் கொண்டும், தரமற்ற சிமென்ட் பயன்படுத்தியும் குளம் கட்டப்பட்டு வருவதை அறிந்தனா். இதையடுத்து, ஒப்பந்ததாரரை எச்சரித்து, பணிகளை தரமாக செய்து முடிக்க உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.