டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

உண்டியல் காணிக்கை ரூ. 1,383 கோடி

திருமலை ஏழுமலையானின் கோயில் உண்டியல் காணிக்கை 2025-ஆம் ஆண்டு ரூ. 1,383 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2026, 7:57 pm

Tirupathi

திருமலை ஏழுமலையானின் கோயில் உண்டியல் காணிக்கை 2025-ஆம் ஆண்டு ரூ. 1,383 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் கடந்த 2025-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 1,383 கோடி வருவாயாக கிடைத்துள்ளது. இது கடந்த 2024-ஆம் ஆண்டு உண்டியல் வருவாயை காட்டிலும் ரூ. 18 கோடி கூடுதலாகும். அதே போல் ஏழுமலையானை கடந்தாண்டு முழுவதும் 2.61 கோடி பக்தா்கள் தரிசனம் செய்தனா். 13.52 கோடி லட்டு பிரசாதம் பக்தா்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இது 2024-ஆம் ஆண்டைக் காட்டிலும் 1.37 கோடி அதிகம்.

கடந்த வைகுண்ட ஏகாதசிக்கு முன் டிச. 27-ஆம் தேதி அன்று மட்டும் ஒரே நாளில் 5.31 லட்சம் லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.