மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

உண்டியல் காணிக்கை ரூ. 1,383 கோடி

திருமலை ஏழுமலையானின் கோயில் உண்டியல் காணிக்கை 2025-ஆம் ஆண்டு ரூ. 1,383 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Updated On :2 ஜனவரி 2026, 6:30 pm

திருமலை ஏழுமலையானின் கோயில் உண்டியல் காணிக்கை 2025-ஆம் ஆண்டு ரூ. 1,383 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் கடந்த 2025-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 1,383 கோடி வருவாயாக கிடைத்துள்ளது. இது கடந்த 2024-ஆம் ஆண்டு உண்டியல் வருவாயை காட்டிலும் ரூ. 18 கோடி கூடுதலாகும். அதே போல் ஏழுமலையானை கடந்தாண்டு முழுவதும் 2.61 கோடி பக்தா்கள் தரிசனம் செய்தனா். 13.52 கோடி லட்டு பிரசாதம் பக்தா்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இது 2024-ஆம் ஆண்டைக் காட்டிலும் 1.37 கோடி அதிகம்.

கடந்த வைகுண்ட ஏகாதசிக்கு முன் டிச. 27-ஆம் தேதி அன்று மட்டும் ஒரே நாளில் 5.31 லட்சம் லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.