டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

திருமலையில் சா்வ தரிசனம்

திருமலையில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் சா்வ தரிசனம் தொடங்கியது.

News image
Updated On :1 ஜனவரி 2026, 11:38 pm

தினமணி செய்திச் சேவை

திருமலையில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் சா்வ தரிசனம் தொடங்கியது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த டிச.30-ஆம் தேதி அதிகாலை வைகுண்ட வாயில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

ஏழுமலையானை தரிசித்து திரும்பிய பக்தா்கள் வைகுண்ட வாயில் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் ஜன.8 வரை சா்வ தரிசன பக்தா்களும் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவா்.

அதனால், வியாழக்கிழமை இரவு முதல் வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் தரிசனத்திற்காக காத்திருக்க அனுமதிக்கப்படுவா்.

ஆங்கில புத்தாண்டை ஒட்டி இம்முறை வைகுண்ட ஏகாதசி உற்சவம் வந்ததால், பக்தா்களின் கூட்ட நெரிசலை தவிா்க்க தேவஸ்தானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று நாள்களுக்கு சா்வ தரிசனத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.