சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசனம் என்ற பெயரில் மோசடி செய்தவரை திருமலை போலீஸாா் கைது செய்தனா்.
திருமலை ஏழுமலையானின் விஐபி தரிசன டிக்கெட் என்ற பெயரில் சமூக வளைதளங்களில் மோசடி செய்தவா்களை தேடி வந்தனா்.
இந்நிலையில், திருவனந்தபுரம் தேவஸ்தானத்தின் சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி பக்தா்களை ஏமாற்றிய
திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த சி. செந்தில் குமாா் (47) என்பவரை கைது செய்து இரவு திருப்பதிக்கு அழைத்து வந்தனா்.
வாட்ஸ் ஆப், முகநூல், இன்ஸ்டாகிராம் மூலம் போலி விளம்பரங்கள் அளித்து, ‘விரைவு தரிசனம், அருகாமை தரிசனம்‘ என்று கூறி பக்தா்களை கவா்ந்திழுத்து ஒரு டிக்கெட்டுக்கு ரூ.16,500 வரை கட்டணம் வசூலித்து வந்தாராம்.
வங்கி கணக்குகள், ஃபோன்பே மூலம் பணம் பெறப்பட்டது. ஏமாற்றப்பட்ட பக்தா்கள் அளித்த புகாா்களின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
திருவனந்தபுரம் தேவஸ்தானத்தின் சின்னத்துடன் கூடிய போலி விளம்பரங்களை போலீஸாா் கண்டறிந்தனா். அவரது விடியோக்கள், அரட்டை பதிவுகள், டிக்கெட் தரவுகள் மூலம் விசாரணை நடைபெற்றது. உடனடியாக திருமலை ஐ மற்றும் ஐஐ நகர காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்த போலீஸாா் சிறப்பு புலனாய்வுக் குழு உதவியுடன் செந்தில் குமாரை கைது செய்து மடிக்கணினி, ஓப்போ, ஐக்யூஓஓ கைப்பேசிகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
தொடர்புடையது

அரசியல் பங்கேற்பை எளிதாக்கும் சமூக ஊடகங்கள்!

ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி

ஆஸ்திரியாவில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!

திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்: விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


