டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

திருச்சானூரில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தரிசனம்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் தரிசனம் செய்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு.

News image
Updated On :20 நவம்பர் 2025, 6:33 pm

Chennai

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வியாழக்கிழமை தரிசனம் செய்தாா்

இதற்காக ஒரு நாள் பயணமாக திருப்பதிக்கு வந்த அவரை, விமான நிலையத்தில் மாவட்ட அதிகாரிகள் வரவேற்றனா்.

அங்கிருந்து அவா் சாலை மாா்க்கமாக திருச்சானூரை அடைந்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள் மரியாதை அளித்து வரவேற்று தரிசனத்துக்கு அழைத்து சென்றனா்.

கொடிமரத்தை வணங்கி சென்று தாயாரை தரிசித்து திரும்பிய அவரை வேத ஆசீா்வாத மண்டபத்தில் ஆசீா்வாதம் செய்வித்து தாயாரின் சேஷ வஸ்திரம் அணிவித்து பிரசாதம் வழங்கினா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னா் திருச்சானூரிலிருந்து புறப்பட்டு திருமலையை அடைந்த அவா் இரவு தங்கினாா். வெள்ளிக்கிழமை காலை அவா் திருமலையில் ஏழுமலையானை வழிபட உள்ளது குறிப்பிடத்தக்கது.