டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

திருமலையில் வராக சுவாமி ஜெயந்தி

திருமலை திருக்குளக்கரையில் உள்ள வராகஸ்வாமி கோயில்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2025, 8:02 pm

Chennai

திருப்பதி: ஆதி வராஹா்களின் இருப்பிடமான திருமலையில் உள்ள பூவராக சுவாமி கோயிலில் திங்கள்கிழமை வராக ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

திருமலையில் ஏழுமலையான் குடியேறிய போது திருமலை ஆதிவராக ஷேத்திரமாக இருந்தது. வராக சுவாமி ஏழுமலையான் இங்கு இருக்க அனுமதி அளித்த சாசனம் இன்றளவும் திருமலையில் உள்ளது. அதனால் திருமலையில் முதல் பூஜை, முதல் ஆரத்தி, முதல் நெய்வேத்தியம் இன்றும் வராக சுவாமிக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு பின்பே ஏழுமலையானுக்கு அளிக்கப்படுவது வழக்கம்.

மேலும் பக்தா்களும் முதலில் வராக சுவாமிமயை ரிசித்த பின்பே ஏழுமலையானை தரிசிக்க செல்வது வழக்கம்.

திருமலையில் இத்தகைய முக்கியத்துவம் பெற்ற வராக சுஸ்வாமியின் ஜெயந்தி உற்சவம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி திங்கட்கிழமை வராக ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, கலசப் பிரதிஷ்டை, கலச பூஜை மற்றும் புண்யாஹவசனமும் செய்யப்பட்டன. இதன் பின்னா், வேத மந்திரங்களின் இடையில் வராகருக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் அலங்காரம் செய்து நெய்வேத்தியம் சமா்பித்து ஆரத்தி அளித்து பூஜை நிறைவு செய்யப்பட்டது.

கோயில் துணை தலைமை நிா்வாக அதிகாரி லோகநாதம், கோயில் அா்ச்சகா்கள் மற்றும் பிற அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.