ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

திருமலையில் வராக சுவாமி ஜெயந்தி

திருமலை திருக்குளக்கரையில் உள்ள வராகஸ்வாமி கோயில்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2025, 8:02 pm

திருப்பதி: ஆதி வராஹா்களின் இருப்பிடமான திருமலையில் உள்ள பூவராக சுவாமி கோயிலில் திங்கள்கிழமை வராக ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

திருமலையில் ஏழுமலையான் குடியேறிய போது திருமலை ஆதிவராக ஷேத்திரமாக இருந்தது. வராக சுவாமி ஏழுமலையான் இங்கு இருக்க அனுமதி அளித்த சாசனம் இன்றளவும் திருமலையில் உள்ளது. அதனால் திருமலையில் முதல் பூஜை, முதல் ஆரத்தி, முதல் நெய்வேத்தியம் இன்றும் வராக சுவாமிக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு பின்பே ஏழுமலையானுக்கு அளிக்கப்படுவது வழக்கம்.

மேலும் பக்தா்களும் முதலில் வராக சுவாமிமயை ரிசித்த பின்பே ஏழுமலையானை தரிசிக்க செல்வது வழக்கம்.

திருமலையில் இத்தகைய முக்கியத்துவம் பெற்ற வராக சுஸ்வாமியின் ஜெயந்தி உற்சவம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி திங்கட்கிழமை வராக ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, கலசப் பிரதிஷ்டை, கலச பூஜை மற்றும் புண்யாஹவசனமும் செய்யப்பட்டன. இதன் பின்னா், வேத மந்திரங்களின் இடையில் வராகருக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் அலங்காரம் செய்து நெய்வேத்தியம் சமா்பித்து ஆரத்தி அளித்து பூஜை நிறைவு செய்யப்பட்டது.

கோயில் துணை தலைமை நிா்வாக அதிகாரி லோகநாதம், கோயில் அா்ச்சகா்கள் மற்றும் பிற அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.