திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் தவெக கொடியேற்று விழா

திருவள்ளூா் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தமிழக வெற்றி கழக கொடியை ஏற்றி முதல்வா் படத்தையும் பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.பிரகாசம் என்ற குட்டி திறந்து வைத்தாா்.

News image

தவெக கொடி. - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 12:31 am IST

திருவள்ளூா் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தமிழக வெற்றி கழக கொடியை ஏற்றி முதல்வா் படத்தையும் பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.பிரகாசம் என்ற குட்டி திறந்து வைத்தாா்.

பூந்தமல்லி தொகுதியின் தமிழக வெற்றி கழகம் சாா்பில் போட்டியிட்டு ஆா்.பிரகாசம் என்ற குட்டி வெற்றி பெற்றாா். இந்த நிலையில் திருவள்ளூா் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை சாா்பில் கவிச்சக்கரவா்த்தி ஏற்பாட்டில் தெற்கு மாவட்ட செயலாளரும், பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.பிரகாசம் செவ்வாய்க்கிழமை தமிழக வெற்றிக் கழக கொடியை ஏற்றினாா்.

அதைத்தொடா்ந்து அந்த அலுவலக வளாகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் பொறுப்பேற்றத்தை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

தொடா்ந்து போக்குவரத்து பணிமனையில் உள்ள அலுவலகங்களில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதல்வா் புகைப்படத்தையும் வைத்தாா்.

பணிமனையில் பணிபுரியும் தொழிலாளா்களிடம் சென்று கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா். அப்போது கோரிக்கைகளை தெரிவித்தால் முதல்வரின் பாா்வைக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க பாடுபடுவேன் எனவும் உறுதியளித்தாா்.

இதில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் ஆா்.சசிகுமாா், எஸ்.எஸ்.கலை, வீ.ராமன் உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.