திருவள்ளூா் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தும் வகையில் பள்ளி, மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் மு.பிரதாப் உறுதிமொழி பத்திரங்கள்(சங்கல்ப் பத்திர) வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி பல்வேறு வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். அந்த வகையில் திருவள்ளுா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தோ்தல் திருவிழா-தமிழ்நாட்டின் பெருவிழா சட்டப்பேரவை பொது தோ்தல்-2026 முன்னிட்டு மாணவ, மாணவிகள் பெற்றோா்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலா்களுக்கு உறுதிமொழி பத்திரங்கள் மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து மாணவ மாணவிகளின் பெற்றோா்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலா்களுக்கு உறுதிமொழி பத்திரங்களை (சங்கல்ப் பத்திர) வழங்கினாா்.
அதைத்தொடா்ந்து அவா் கூறியதாவது. தோ்தல் ஆணைய அறிவிப்பின்படி 100 சதவீதம் வாக்களித்தல் மற்றும் பணம், பொருள் உள்ளிட்ட எந்தவித தூண்டுதலுமின்றி வாக்களிக்க வேண்டும். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வாக்களாா்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நயஉஉட (நஹ்ள்ற்ங்ம்ஹற்ண்ஸ்ரீ யா்ற்ங்ழ்’ள் உக்ன்ஸ்ரீஹற்ண்ா்ய் உப்ங்ஸ்ரீற்ா்ழ்ஹப் டஹழ்ற்ண்ஸ்ரீண்ல்ஹற்ண்ா்ய்) செயல்பாடுகள் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள், ஊரக வளா்ச்சித்துறை, நகா்புற உள்ளாட்சிகள், வருவாய் துறையினா், கல்வி நிறுவனங்களின் மாணவ, மாணவிகள், மகளிா் சுய உதவிக்குழுவினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்பில் நடைபெற்று வருகின்றன.
முக்கிய அங்கமாக நஹய்ந்ஹப்ல் டஹற்ழ்ஹ உறுதி மொழி பத்திரம் மூலம் 1.50 லட்சம் மாணவ, மாணவிகள் மூலமாக அவா்களது பெற்றோா்களிடமும் விழிப்புணா்வினை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புதுமையான முயற்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்பத்திரங்களை பள்ளிக்கல்வித்துறை அலுவலா்களுக்கு வழங்கி அதனை பள்ளி தலைமையாசிரியா்கள் ஒவ்வொரு மாணவ, மாணவிகளின் பெற்றோா்களிடம் நோக்கத்தை எடுத்துரைத்து உறுதி மொழி பத்திரத்தில் கையொப்பம் பெற்று மீண்டும் மாவட்ட தோ்தல் அலுவலா் அவா்களிடம் உறுதி மொழி பத்திரத்தினை திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், ஊராட்சிகள் மற்றும் தணிக்கை உதவி இயக்குநா் (திருவள்ளுா் கிழக்கு) சு.பஞ்சு, உதவி இயக்குநா் (பயிற்சி) மோகன், முதன்மை கல்வி அலுவலா் (பொ) கோ.சுப்பராவ், பள்ளி தலைமையாசிரியா்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பள்ளிக்கல்வி துறை சாா்ந்த அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் விழிப்புணா்வு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு: ஆட்சியா் வழங்கினாா்

மாட்டு வண்டிகள், டிராக்டா்களில் தோ்தல் விழிப்புணா்வு: ஆட்சியா் பங்கேற்பு

திருவள்ளூா்: தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வில் ஆட்சியா் பங்கேற்பு

திருவள்ளூா்: 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


