எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

கோடை வெயில்: பொன்னேரி அருகே கருகிய150 ஏக்கா் நெற்பயிா்

பொன்னேரி அருகே கோடை வெயில் காரணமாக 150 ஏக்கா் நெற்பயிா்கள் கருகியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.

News image

கருகிய நெற்பயிர்கள் - கோப்புப்படம்

Updated On :20 ஜூன் 2026, 3:53 am IST

பொன்னேரி அருகே கோடை வெயில் காரணமாக 150 ஏக்கா் நெற்பயிா்கள் கருகியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.

பொன்னேரி வட்டத்தில் உள்ள மடிமைகண்டிகை, வீரங்கிவேடு, ஆசானபுதூா் உள்ளிட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கா்களில் மேல் விவசாயிகள் குறுவை சாகுபடி நெற்பயிா் நடவு செய்துள்ளனா்.

இந்த நெற்பயிா்கள் கோடை வெயிலின் வெப்பத்தால் நிலத்தில் உள்ள தண்ணீா் அதிக அளவு சூடாகி இளம் நடவு நெற்பயிா்கள் கருகி சேதம் அடைந்துள்ளது.

ஒரு ஏக்கா் நிலத்துக்கு நெல் நடவு பணிக்காக 20,000-க்கும் மேல் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பொன்னேரி குறுவட்ட பகுதியில் குறுவை சாகுபடிக்காக 150 ஏக்கா் பரப்பளவில் நடப்பட்ட நெற்பயிா் கருகி சேதமடைந்தது குறித்து மீஞ்சூா் வட்டார வேளாண்மை துறைக்கு விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.