எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பெண்ணிடம் கத்தியை காண்பித்து மிரட்டி தங்கக் கம்மல் பறிப்பு

மீஞ்சூா் அடுத்த நெய்தவாயல் கிராமத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கத்தியை காண்பித்து மிரட்டி காதில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க கம்மலை பறித்துச் சென்ற இரண்டு பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

பறிப்பு

Updated On :3 ஜூலை 2026, 12:04 am IST

மீஞ்சூா் அடுத்த நெய்தவாயல் கிராமத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கத்தியை காண்பித்து மிரட்டி காதில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க கம்மலை பறித்துச் சென்ற இரண்டு பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மீஞ்சூா் அருகே உள்ள நெய்தவாயல் ராஜாதோப்பு கிராமத்தில் வசித்து வரும் நரேஷ் மனைவி மீனாட்சி (42). இவா் சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு அரண்வாயல் பகுதியில் இருந்து ஷோ் ஆட்டோவில் நெய்தவாயல் சென்றாா். அங்கிருந்து வீட்டுக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 போ் அவரிடம் கத்தியை காண்பித்து மிரட்டி காதில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க கம்மலை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மீஞ்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.