நடிகா் ரஜினிகாந்த் உதவியாளரின் மகன் விபத்தில் உயிரிழப்பு
சோழவரம் அருகே நடிகா் ரஜினிகாந்தின் உதவியாளா் மகன் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா்.


சோழவரம் அருகே நடிகா் ரஜினிகாந்தின் உதவியாளா் மகன் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் கருணாகரன். இவா் நடிகா் ரஜினிகாந்திடம் உதவியாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மகன் தினேஷ் (28). திரைப்படத் துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்துள்ளாா்.
இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்து மோட்டாா் சைக்கிளில் சென்னை சாலிகிராமம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.
சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சோழவரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரின் மோட்டாா் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த தினேஷ் பலத்த காயமடைந்த நிலையில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா், அங்கு சென்று தினேஷின் சடலத்தை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து செங்குன்றம் போக்குவரத்து பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இதனிடையே விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...