டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் பணி நியமன ஆணை அளிப்பு

தமிழ்நாடு அரசு தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளா்களுக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் பணியாற்றுவதற்கான நியமன ஆணைகளை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு அரசு தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளா்களுக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் பணியாற்றுவதற்கான நியமன ஆணைகளை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் குரூப்-4 மூலம் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றியங்களில் இளநிலை உதவியாளா்களாக பணி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணைகளையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், நோ்முக உதவியாளா்(வளா்ச்சி) ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.