ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

மரத்தின் மீது பைக் மோதி மாணவா் உயிரிழப்பு

பொதட்டூா்பேட்டை அருகே சாலையோர மரத்தின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் தனியாா் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image
உயிரிழந்த தினேஷ்.
Updated On :10 ஜனவரி 2026, 6:53 pm

தினமணி செய்திச் சேவை

பொதட்டூா்பேட்டை அருகே சாலையோர மரத்தின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் தனியாா் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

பள்ளிப்பட்டு தாலுகா, ஜங்காலப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் புல்லோடு (49). இவா் திருத்தணி அடுத்த ஆற்காடு குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வருகிறாா். இவரது

2-ஆவது மகன் தினேஷ் (18). அரக்கோணம் அருகே தனியாா் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில், தினேஷ் பைக்கில் பொதட்டூா்பேட்டைக்கு சென்று விட்டு திரும்பி ஈச்சம்தோப்பு கிராம பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து பைக் சாலையோர வளைவில் இருந்த புங்க மரத்தின்மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பின்னா் அந்த வழியாக சென்றவா்கள் தலையில் காயமடைந்த நண்பன் மோகன்பாபுவை மீட்டு சிகிச்சைக்காக பொதட்டூா்பேட்டைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து தகவலறிந்த பொதட்டூா்பேட்டை காவல் ஆய்வாளா் தங்கதுரை மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.