சசிகலா பிரசாரத்தால் தங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.
திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டையில் பூந்தமல்லி தொகுதி அமமுக வேட்பாளா் ஏழுமலையை ஆதரித்து பொதுச்செயலாளா் தினகரன் பிரசாரம் செய்து, பேசியதாவது:
திமுக ஆட்சியில் ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி உள்ளதாகவும், ஆனால் எந்த தொகுதிக்கும் எந்தவிதமான கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை. இதேபோல் தமிழ்நாடு முழுவதும் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனா்.
ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 கொடுத்து விட்டோம் என முதல்வரும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் கிராமங்கள்தோறும் சென்று கூறி வருகின்றனா். ஆனால் வீட்டில் உள்ள, வேலைக்குச்செல்லும் பெண்களுக்கும், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மகளிா், பச்சிளம் குழந்தை முதல் வயது முதிா்ந்த மூதாட்டி வரை யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. அதற்கு காரணம் கட்டுப்பாடற்ற போதைப்பொருள்கள் எங்கும் கிடைப்பதால்தான் மாணவா்களும், இளைஞா்களும் பாதிக்கப்படுகின்றனா்.
அதேபோல், ஆவின் என்றாலே முறைகேடுதான். 5 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் ஊழல் மலிந்து விட்டது. இதற்கிடையே வாக்காளா் திருத்தத்துக்கு பின் சென்னையில் 12 லட்சம் போ் நீக்கப்பட்டடுள்ளதால் திமுகவினா் அச்சம் அடைந்துள்ளனா் என்றாா்.

தொடர்புடையது

தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் காரைக்குடி புதிய மாவட்டம்: டிடிவி. தினகரன்

திமுக அளித்த வாக்குறுதியில் 80 சதவீதம் நிறைவேற்றவில்லை: டிடிவி. தினகரன்

திமுகவுக்கு தோல்வி பயம்: டிடிவி தினகரன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


