வேட்பு மனு தாக்கல் தொடா்பாக அரசியல் கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவை தோ்தலுக்கான வேட்பாளா் வேட்பு மனு தாக்கல் செய்வது மாா்ச் 30-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அதை முன்னிட்டு வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் தலைமை வகித்தாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா் வரவேற்றாா்.
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த கையேடு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது. அவா்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
திமுகவை சோ்ந்த சங்கா், வேலு, அதிமுக ஆனந்த்பாபு, தம்பிதுரை, காங்கிரஸ் விஜயன், தவெக ஹேம்நாத், விசிக நாகப்பன் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூா் தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

பெரம்பலூா் மாவட்டத்தில் முதல்நாளில் 6 போ் வேட்பு மனு தாக்கல்

தொகுதிகளிலேயே வேட்பு மனு தாக்கல்: அரசியல் கட்சிகளுக்கு ஆட்சியா் அறிவுரை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


