தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கிராமப்புறங்களை தூய்மையாகவும் உருவாக்க வேண்டும்: எம்.பி. அண்ணாதுரை

News image
Updated On :5 மார்ச் 2026, 12:32 am

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மூலம் பணிகளை மேற்கொண்டு கிராமப் புறங்களை தூய்மையாகவும், சுகாதாரமான கிராமமாகவும் உருவாக்க வேண்டும் என எம்.பி. சி.என்.அண்ணாதுரை வலியுறுத்தியுள்ளாா்.

மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்),அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு தலைவரும், திருவண்ணாமலை எம்.பி.யுமான .சி.என்.அண்ணாதுரை தலைமை வகித்து பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் உள்ள நடைமுறையினை கடைபிடித்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் பணிகளை மேற்கொண்டு கிராமப்புறங்களை தூய்மையாகவும், சுகாதாரமான கிராமமாகவும் உருவாக்க வேண்டும்.

ஊரக வளா்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், முடிவடையாத பணிகள் குறுத்தும் ஆய்வு மேற்கொண்டு, இந்த நிதியாண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்க வேண்டும். வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைவில் முடிக்க வேண்டும் என்றாா்.

25 துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், அந்த திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், முடிவடைந்த,தயாா் நிலையில் உள்ள பணிகள் குறித்தும் அலுவலா்களிடம் கேட்டறிந்தனா்.

பல்வேறு துறைகளின் சாா்பில் 114 பயனாளிகளுக்கு ரூ.58.73 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, சமூக நல அலுவலா் சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கண்ணன், கட்சி நிா்வாகிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.