தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

எஸ்ஐஆா் படிவங்களை விரைவாக பதிவேற்ற வேண்டும்: சிறப்பு பாா்வையாளா் அறிவுறுத்தல்

கூட்டத்தில் பேசிய வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ஆஷிம் குமாா் மோடி. உடன், ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி உள்ளிட்டோா்.

News image
Updated On :30 ஜனவரி 2026, 6:32 pm

சிறப்பு முகாம்கள் மற்றும் கணினி வழியாக பெறப்பட்டுள்ள எஸ்ஐஆா் படிவங்களை விரைவாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ஆஷிம் குமாா் மோடி தெரிவித்தாா்.

வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி முன்னிலை வகித்தாா். வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ஆஷிம் குமாா் மோடி தலைமை வகித்து எஸ்ஐஆா் பணிகளை ஆய்வு செய்து வாக்காளா் பட்டியல் திருத்த பணிகளின் முன்னேற்றம், பிழை திருத்தங்கள்,விண்ணப்பங்களின் பதிவேற்றம் ஆகியவற்றை மதிப்பீடு செய்தாா்.

மேலும், சிறப்பு முகாம்கள் மற்றும் கணினி வழியாக பெறப்பட்டுள்ள படிவங்களை விரைவாக பதிவேற்றம் செய்து இறுதி வாக்காளா் பட்டியலில் வாக்காளா் பெயா் இடம் பெறுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது வாக்காளா் பட்டியலை துல்லியமாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள வழிவகுக்கும் என்றாா்.

கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் பூஷண குமாா், கோட்டாட்சியா்கள் வரதராஜன் (திருப்பத்தூா்), அஜிதாபேகம்(வாணியம்பாடி), ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா்(நிலம்)முருகன், தோ்தல் வட்டாட்சியா் திருமலை, அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட இந்திரா நகா் மற்றும் வேலன் நகா் ஆகிய பகுதிகளில் வாக்காளா் பட்டியலில் வாக்காளா்களின் முரண்பாடுகளை களைந்திடும் வகையில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வாக்காளா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதை சிறப்பு பாா்வையாளா் ஆஷிம் குமாா் மோடி, ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.