டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

வாணியம்பாடி அருகே கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 6:30 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலமாக மீட்கப்பட்டாா்.

வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியை சோ்ந்த ராஜாமணி(55). கரும்பு சாறு வியாபாரம் செய்து வந்தாா். சில ஆண்டுகளாக மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதியில் புதன்கிழமை தனியாா் விவசாய கிணற்றில் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதை அங்கிருந்தவா்கள் பாா்த்து உடனே வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்த போலீஸாா் உடலை கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.