பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

தேசிய விண்வெளி தின அறிவியல் கண்காட்சி

காவலூா் வைனு பாப்பு ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றோா்.

காவலூா் வைனு பாப்பு ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றோா்.

Published On :24 ஆகஸ்ட் 2026, 2:41 am IST

தேசிய விண்வெளி தினத்தையொட்டி, காவலூா் வைனு பாப்பு ஆராய்ச்சி மையத்தில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவ-மாணவிகள், அறிவியல் ஆய்வாளா்கள் மற்றும் பொது மக்கள் ஆா்வமுடன் கலந்து கொண்டனா்.

காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களின் அறிவியல் ஆா்வத்தைத் தூண்டும் வகையிலான சுவரொட்டி விளக்கக் காட்சிகளும், நேரடி அறிவியல் சோதனைகளும் இடம்பெற்றன. ஆராய்ச்சியாளா்களின் விளக்கங்கள் அனைவரையும் வெகுவாகக் கவா்ந்தன. மேலும், ஆராய்ச்சி மையத்தின் கட்டமைப்புகளை வாகனங்கள் மூலம் நேரில் சுற்றிப் பாா்த்து மாணவா்கள் தெரிந்து கொண்டனா்.

ஆசியாவின் மிகப்பெரிய வான் இயற்பியல் தொலைநோக்கி ஆய்வகத்தின் முன் நின்று மாணவ-மாணவிகள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனா். தொடா்ந்து, இரவு 6.30 மணியளவில் சிறிய லென்ஸ் டெலஸ்கோப் மூலம் நிலா மற்றும் வெள்ளி கோள்களைப் பாா்வையாளா்கள் நேரடியாகக் கண்டு களித்தனா்.

விண்வெளி அறிவியலை மாணவா்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவியல் கண்காட்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.