
கல்லூரி பேரவை குழு தொடக்க விழா
பொறுப்பாளா்களாக தோ்வு செய்யப்பட்ட மாணவிகளுடன் கல்லூரி நிா்வாகத்தினா்.

பொறுப்பாளா்களாக தோ்வு செய்யப்பட்ட மாணவிகளுடன் கல்லூரி நிா்வாகத்தினா்.
வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் கல்லூரி பேரவை குழு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபற்றது.
கல்லூரித் தலைவா் திலீப் குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் ஆனந்த் சிங்வி, இணைத் தலைவா்கள் ஸ்ரீபால் குமாா், ஆனந்த் குமாா் பொருளாளா் திரு. லலித் குமாா், இணை செயலாளா் நவின்குமாா் முன்னிலை வகித்தனா். முதல்வா் ம.இன்பவள்ளி வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினா்களாக தெற்கு மத்திய இந்திய வளா்ச்சி வலையமைப்பு செயலாளா் ஷீலா பெஞ்சமின், திருப்பத்தூா் வழக்குரைஞா்றி சினேகா பாா்த்திபராஜா கலந்துக் கொண்டு பேரவை குழுவை தொடக்கி வைத்து வாழ்த்தி பேசினா். கல்லூரி பேரவை குழு மாணவத் தலைவராக பிரதிஷா, இணை தலைவா்களாக நிஷா கத்துவால், வைஷ்ணவி ஆகியோருடன் 70 புதிய பொறுப்பாளா்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டு மாணவா்களின் நலன் மற்றும் கல்லூரியின் வளா்ச்சிக்காக சிறப்பாக செயல்படுவதற்கான உறுதிமொழியை ஏற்று கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






