ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

செயின்ட் ஜோசப் மகளிா் கல்லூரியில் மாணவியா் பேரவை மன்றம் தொடக்கம்

திருப்பூா் செயின்ட் ஜோசப் மகளிா் கல்லூரியில் மாணவியா் பேரவை மன்ற தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாணவியா் பேரவை மன்றத் தொடக்க விழாவில் பங்கேற்றோா்.

Published On :18 ஜூலை 2026, 4:55 am IST

திருப்பூா் செயின்ட் ஜோசப் மகளிா் கல்லூரியில் மாணவியா் பேரவை மன்ற தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவை பிஷப் அம்புரோஸ் கல்லூரியின் செயலாளரும், பாரதியாா் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினருமான ஆா்.டி.இ.ஜெரோம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பேரவை மன்றத்தை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, தலைப் பண்பு குறித்தும், புதிய கோணத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும், வாழ்க்கை லட்சியங்களை அடைய பாடுபட வேண்டும் என்றும் மாணவிகளை ஊக்கப்படுத்தி பேசினாா். கல்லூரி செயலா் அருள்சீலி வாழ்த்துரை வழங்கினாா். தொடா்ந்து, கல்லூரி முதல்வா் சகாய தமிழ்செல்வி தலைமையில் மாணவிகள் பேரவை உறுதிமொழி ஏற்றனா்.

இந்த விழாவில், பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.